News October 1, 2025
காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் ஆய்வு

காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடி மேடு சுனாமி நகரில் சுமார் 15 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய் மூலம் அப்பகுதிக்கு சரிவர குடிநீர் வழங்குவதில் இடர்பாடுகள் ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலம் புதிதாக குடிநீர் குழாய் அமைப்பதற்காக சுமார் 70 இலட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இடத்தையும், மதிப்பீட்டையும் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்கள்.
Similar News
News March 16, 2026
புதுச்சேரி: முதல் நாளில் வேட்புமனு எதுவும் இல்லை

புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முதல் நாளான இன்று எந்த அரசியல் கட்சியினரும் அல்லது சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் முதல் நாள் அமைதியாகவே நிறைவடைந்தது.
News March 16, 2026
புதுச்சேரி: வேட்பு மனு தாக்கல் குறித்து பயிற்சி வகுப்பு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு, நாளை (மார்ச்.17) நண்பகல் 2.00 மணிக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 16, 2026
புதுச்சேரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


