News October 1, 2025
உருவானது புயல் சின்னம்.. கனமழை கொட்ட போகுது

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
Similar News
News October 1, 2025
தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மையா? PHOTOS

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ‘ஹேர் ஜெல்’ போன்றவற்றை பயன்படுத்தும் இளம் தலைமுறையினருக்கு தேங்காய் எண்ணெயின் பயன்கள் பற்றித் தெரிவதில்லை. தலைமுடியின் ஆரோக்கியம் காக்க தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகளை மேலே போட்டோக்களாக அளித்துள்ளோம். ஸ்வைப் செய்து பார்த்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள்.
News October 1, 2025
போதைப்பொருளுடன் சென்னையில் நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ₹40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை விமான நிலையத்தில் பாலிவுட் துணை நடிகர் விஷால் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Student of the Year உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக விஷால் நடித்திருக்கிறார்.
News October 1, 2025
விண்வெளியில் கரம் கோர்க்கும் ஹாலிவுட் ஜோடி?

ஹாலிவுட் நடிகர் <<17246269>>டாம் குரூஸ் <<>>(63), நடிகை அனா டி அர்மாஸ் (37) விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாகச விரும்பிகளான இருவரும், தங்களது திருமணத்தை புதுமையான முறையிலும், என்றும் நினைவில் இருந்து நீங்காத வண்ணம் இருக்க இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, டாம் குரூஸுக்கு 3 முறை திருமணம் நடந்து விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.