News October 1, 2025
உருவானது புயல் சின்னம்.. கனமழை கொட்ட போகுது

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
Similar News
News March 12, 2026
போர் முடிவுக்கு வர ஒரே வழி இதுதான்: ஈரான்

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் போர் நிலைமை குறித்து விவாதித்ததாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பிராந்திய அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதிபூண்டுள்ளது என்றார். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி என்றும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News March 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 12, 2026
திமுகவின் பகல் கனவு பலிக்காது: GK வாசன்

தேர்தலுக்கு முன்பே NDA வெற்றி கூட்டணியாக உலா வந்து கொண்டிருக்கிறது என GK வாசன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், திமுக மீதான PM-ன் குற்றச்சாட்டுகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றார். வாக்குறுதியை நிறைவேற்றாத, சட்ட ஒழுங்கை சீர்குலைத்த திமுகவிற்கு எதிராக எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது எனவும் தெரிவித்தார்.


