News April 14, 2024
கையாடல் செய்த வங்கி மேலாளர் சிறையிலடைப்பு

சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி கடந்த மார்ச்மாதம் அவரது கணவரின் ஆயுள்காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000 EASF Small Finance வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்த போலீசார் விசாரணையில் மானாமதுரையில் உள்ள EASF Small Finance வங்கியின் கிளை மேலாளர் முத்துகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 13, 2025
சிவகங்கை: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️சிவகங்கை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 13, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (13.9.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
News September 13, 2025
சிவகங்கை: AI தொழில் நுட்பம் மூலம் இறந்த யானையின் சிலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுப்புலெட்சுமி என்ற யானை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ந் தேதி எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டது. அதற்கு நினைவாக குன்றக்குடியில் சிலை அமைக்க இன்று, செப்டம்பர் 13, பூமி பூஜை செய்யப்பட்ட நிலையில், யானையின் AI தொழில் நுட்ப சிலை வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.