News October 1, 2025

வாரிசுக்கு ‘நோ’ சொன்னதா திமுக தலைமை?

image

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு பதிலாக தனது 3வது மகன் மகேஷை எப்படியாவது திருச்செந்தூரில் நிறுத்திவிடலாம் என்ற யோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் கூட தலைமையின் காதுகளுக்கு விஷயத்தை அமைச்சர் தரப்பு பாஸ் செய்ததாம். ஆனால் தலைமையோ, அது சரிவராது எனவும், தேர்தல் வேலைகளை கவனியுங்கள் என்றும் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News March 15, 2026

தேர்தலில் முதல்முறையாக வரப்போகும் அதிரடி மாற்றம்

image

5 மாநில தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, முதல்முறையாக வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் படம் மற்றும் சின்னம் கருப்பு வெள்ளையாக இல்லாமல் வண்ணத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் எனவும் அனைத்து BLO-க்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 15, 2026

புதுச்சேரியில் ஏப்.9-ல் சட்டப்பேரவை தேர்தல்

image

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். ஒரே கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

News March 15, 2026

BIG BREAKING: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

image

தமிழகத்திற்கு எப்போது சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மக்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வழக்கம்போல், ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதேபோல், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்காளர்களே, தயாராக இருங்க!

error: Content is protected !!