News October 1, 2025
வாரிசுக்கு ‘நோ’ சொன்னதா திமுக தலைமை?

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு பதிலாக தனது 3வது மகன் மகேஷை எப்படியாவது திருச்செந்தூரில் நிறுத்திவிடலாம் என்ற யோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் கூட தலைமையின் காதுகளுக்கு விஷயத்தை அமைச்சர் தரப்பு பாஸ் செய்ததாம். ஆனால் தலைமையோ, அது சரிவராது எனவும், தேர்தல் வேலைகளை கவனியுங்கள் என்றும் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 1, 2025
செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? அதிமுக

கரூர் துயரத்தில் செந்தில் பாலாஜி பதறுவதாக அதிமுக விமர்சித்துள்ளது. கரூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்த பிறகு சட்ட ஒழுங்கு ADGP, டிஜிபி, வருவாய் செயலர் பிரஸ் மீட் நடத்திய நிலையில், பதறிக்கொண்டு செந்தில் பாலாஜி பிரஸ் மீட் நடத்துவதாக அதிமுக சாடியுள்ளது. பல விஷயங்களுக்கு மவுனம் காத்த அவர், இவ்வழக்கில் மடைமாற்ற அரசியலுக்காக வாய் திறக்கிறாரா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
News October 1, 2025
பிரசாந்த் கிஷோரின் 7 தேர்தல் வாக்குறுதிகள்

பிஹாரில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள பிரசாந்த் கிஷோர், தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். *60 வயதை தாண்டிய அனைவருக்கும் மாதம் ₹2,000. * புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என புதிய துறையை உருவாக்கி, வேலைவாய்ப்பு வழங்கப்படும். *அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வரை, தனியார் பள்ளிகளில் இலவச கல்வி. *ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
News October 1, 2025
ஜிவி பிரகாஷுக்கு அன்பளிப்பு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் பரிசு கொடுத்துள்ளார். ‘வாத்தி’ படத்திற்காக ஜிவி பிரகாஷ் 2-வது முறையாக தேசிய விருது வென்ற நிலையில், அவருக்கு தான் பயன்படுத்திய வெள்ளை நிற பியானோவை ஏ.ஆர்.ரஹ்மான் தந்துள்ளார். இது தனது வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு என்றும், இதை விட சிறந்த பரிசு ஒன்றை எதிர்பார்க்க முடியாது எனவும் x-ல் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.