News October 1, 2025
கோவில்பட்டி: அரிவாளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் கார்த்திக் (21), சூரியகுமாரர் (23) ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்து அரிவாள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 1, 2025
தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பொருட்களை சப்ளை செய்வதற்கு மற்றும் டெலிவரி செய்வதற்கு லாரிகள் தேவைப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதற்கான ஒப்பந்தத்தை இணையத்தின் வாயிலாக 2ம் தேதி காலை 10 மணி முதல் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் இருப்பின் அந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
தூத்துக்குடி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0461-2335111
▶️தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
▶️Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 1, 2025
தூத்துக்குடி மீனவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பதிவு செய்த மீனவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.