News October 1, 2025
மழை சீசனில் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மூலிகை தேநீர் நல்ல நிவாரணம் தரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *தேவையான பொருள்கள்: துளசி, இஞ்சி, ஏலக்காய் பொடி, மிளகு பொடி, சீரகம், பட்டை பொடி, மஞ்சள், டீ தூள் & வெல்லம் ★செய்முறை: தண்ணீரில் துளசி இலையுடன், டீ தூள், சீரகம் என அனைத்தையும் போட்டு கொதிக்க வைங்க. இஞ்சியை தட்டிப்போட்டு, நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி குடிக்கவும். SHARE IT.
Similar News
News October 1, 2025
விக்கிபீடியாவுக்கு போட்டியாக களமிறங்கும் ‘க்ரோக்கிபீடியா’

தகவல்களை அள்ளி கொடுக்கும் விக்கிபீடியாவுக்கு போட்டியாக எலான் மஸ்க் ‘க்ரோக்கிபீடியா’ என்ற புதிய AI தகவல் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்த புதிய தளம், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை க்ராக் AI மூலம் அனலைஸ் செய்து, உடனடியாக நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு கொடுக்குமாம். இதற்கு மக்களின் ஆதரவு தேவை என எலான் மஸ்க் கேட்டுள்ளார். இதை ’ரிச்சிபீடியா’ என அழைக்கலாமா என சிலர் கிண்டலடித்துள்ளனர்.
News October 1, 2025
பரப்புரை தற்காலிகமாக ரத்து: விஜய்

தவெக பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, கட்சியின் X பக்கத்தில், நாம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் இருக்கும் இச்சூழலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
News October 1, 2025
ஹிட் லிஸ்டில் இருக்கும் 2 அமைச்சர்களா?

திமுகவில் களையெடுக்கும் பணிகளை உதயநிதி-செந்தில் பாலாஜி காம்போ செய்துவருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோவை மா.செ.வான கார்த்திக் நீக்கப்பட்டு, அப்பதவிக்கு இளைஞரணியில் இருந்த செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டார். இதேபோல, கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி 2 அமைச்சர்கள் & 5 MLA-க்களுக்கு அடுத்த முறை சீட் வழங்காமல் கல்தா கொடுக்க திட்டமிடுவதாக தகவல் உலவுகிறது. அந்த 2 அமைச்சர்கள் யாராக இருக்கும்?