News October 1, 2025
அரசியல் லாபமடைய முயலும் EPS: தங்கம் தென்னரசு

கரூர் துயரில் இருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று EPS முயல்வது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசை போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதை EPS புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.
Similar News
News March 10, 2026
காங்கிரஸை போல் விசிகவிலும் இந்த பஞ்சாயத்தா?

சீட் ஷேரிங்கின் போது தவெக/திமுக ஆதரவு என காங்., 2 அணிகளாக இருந்ததை போல விசிகவில் பஞ்சாயத்து வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்குவதால் விசிகவில் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஆனால் இதற்கு கவலைப்படாத விசிகவினர் சிலர் CM புகழ் பாடுவதிலேயே கருத்தாக இருக்கிறார்களாம். எனவே CM விசுவாசிகளுக்கு சீட் வழங்கக்கூடாது என திருமாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 10, 2026
30-30-30 ரூல் ட்ரை பண்ணி பாருங்க..

30-30-30 விதி தெரியுமா? காலையில் எழுந்த 30 நிமிடங்களுக்குள் 30 கிராம் ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பசியைக் குறைக்கும். அடுத்த, 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 30 நிமிடத்திற்குள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி காலை 1 மணி நேரத்தை செலவிட்டால், அது நாள் முழுவதும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News March 10, 2026
இரவில் அனைவருக்கும் வந்தது.. உடனே செக் பண்ணுங்க

இந்தியாவின் சில நகரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம், போதுமான அளவு சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாக BPCL, HPCL நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளன. எனினும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளன.


