News October 1, 2025
செங்கல்பட்டு: சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பைக்கில் அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் ஜோஸ்வாவின் கண்கள் தானம் அளிக்கப்பட்டது.
Similar News
News October 1, 2025
பெரும்பாக்கம்: லாரி மோதியதில் உணவு டெலிவரி ஊழியர் பலி

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் சகாயராஜ் (40). இவர் நேற்று முன்தினம் இரவு உணவு டெலிவரி செய்ய சென்றபோது பெரும்பாக்கம் சர்ச் அருகில் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார், லாரி டிரைவர் சீனு (30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News October 1, 2025
செங்கல்பட்டு: ஆடு பண்ணை வைக்கை ஆசையா?

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (ம) கால்நடை வேளாண் அறிவியல் பல்கலை இணைந்து அக்.6-ம் தேதி முதல் நவ.4-ம் தேதி வரை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்க உள்ளது. செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் இதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் இளைஞர்கள் (ம) விவசாயிகள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 99405-42371 என்ற எண்ணை அழைக்கலாம். (சிறந்த முறையில் பயிற்சி முடித்தால் ஆட்டுப்பண்ணை வைக்க உதவும்)
News October 1, 2025
செங்கல்பட்டு: B.E முடித்தாலே ரூ.90,000 சம்பளம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் இங்கு <