News October 1, 2025
சென்னையில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் நேற்று மாலை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
சென்னை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

சென்னை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 12, 2026
சென்னையில் சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக, கோயம்பேட்டை இணைக்கும் பல்வேறு கிளைச் சாலைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பாடி மேம்பாலம் முதல் திருநின்றவூர் வரையிலான சாலையை வலுப்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) பரிந்துரை செய்துள்ளது.


