News October 1, 2025
விற்பனைக்கு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி

2025 IPL கோப்பையை RCB வென்றதோடு, அதற்கான வெற்றி பேரணியில் 11 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், Royal Challengers அணியை விற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விலையும் ₹17,762 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். தற்போது பிரிட்டனைச் சேர்ந்த Diageo குழுமமே இதன் உரிமையாளராக உள்ள நிலையில், Serum நிறுவன CEO அதார் பூனாவலா அணியை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News October 1, 2025
மழை சீசனில் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மூலிகை தேநீர் நல்ல நிவாரணம் தரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *தேவையான பொருள்கள்: துளசி, இஞ்சி, ஏலக்காய் பொடி, மிளகு பொடி, சீரகம், பட்டை பொடி, மஞ்சள், டீ தூள் & வெல்லம் ★செய்முறை: தண்ணீரில் துளசி இலையுடன், டீ தூள், சீரகம் என அனைத்தையும் போட்டு கொதிக்க வைங்க. இஞ்சியை தட்டிப்போட்டு, நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி குடிக்கவும். SHARE IT.
News October 1, 2025
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓபனிங் ஆடலாம்: அஸ்வின்

2026 T20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, 15 T20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. எனவே, இந்த T20 போட்டிகளில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஓபனிங் பேட்டராக களமிறக்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். அவரும், அபிஷேக் சர்மாவும் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில்லின் ஆட்டம் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அஸ்வின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
ஆதவ் அர்ஜுனா கைதா?

இலங்கை, நேபாளத்தில் இளைஞர்கள், genz தலைமுறையினர் எப்படி அதிகாரத்துக்கு எதிராக புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதேபோல் இங்கும் நிகழும் என்று அர்ஜுனா வெளியிட்ட பதிவு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அவருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முக்கிய பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.