News April 14, 2024

ஈரோடு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் போன்ற 12 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

image

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்கள், லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பாரங்கள் ஏற்றுவது வாகனத்தை பழுதாக்குவதோடு விபத்து ஏற்படவும் காரணமாகிறது. எனவே பாரங்கள் ஏற்றி செல்வது, எடையின்
அளவு குறித்த விதிகளை எப்போதும் பின்பற்றுவோம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் போலீசார் தெரிவித்தனர்.

News September 16, 2025

ஈரோடு வருகிறார் தவெக விஜய்!

image

ஈரோடு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பயணத்தின் அடுத்த கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகின்ற 04/10/2025 அன்று வரவிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரின் மக்கள் சந்திப்பிற்கு உரிய பாதுகாப்பும் அனுமதியும் வழங்குமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவிடம் ஈரோடு மாவட்ட தவெக செயலாளர் பாலாஜி தலைமையில் இன்று
(செப்.16) மனு அளிக்கப்பட்டது.

News September 16, 2025

ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!

image

சத்தியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அம்மாசை தலைமையிலான காவல்துறையினர் ஜெய்சக்திமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 4 பேர் வட்டமாக அமர்ந்து பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தை சேர்ந்த நடராஜ், முனுசாமி, ராஜா, வேலுச்சாமி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!