News September 30, 2025

டிகிரி முடித்தால் ₹35,400 சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News March 12, 2026

நடிகர் ஹரி முரளி தற்கொலை.. சோகமான தகவல்

image

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட <<19362357>>இளம் நடிகர் ஹரி முரளி(27)<<>>, தற்கொலை செய்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அன்னூர் இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி அவரது சடலம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விபரீத முடிவுக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த ஹரி முரளி இளம் வயதிலேயே தற்கொலை முடிவை எடுத்திருப்பது பெரும் சோகம்.

News March 12, 2026

திருட்டு என்ஜின் தான் திமுக அரசு: TTV

image

PM மோடி கூறிய டபுள் இன்ஜின் அரசை டப்பா இன்ஜின் என விமர்சித்திருந்த CM ஸ்டாலின், தமிழகத்தில் அது எடுபடாது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,
அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு மத்திய அரசு உதவும் என்பதை தான் டபுள் இன்ஜின் அரசு என PM மோடி குறிப்பிட்டதாக TTV விளக்கியுள்ளார். மேலும், திமுக அரசை திருட்டு ரயில் இன்ஜின்; வித் அவுட் டிக்கெட் இன்ஜின் என்று அவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

News March 12, 2026

வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

image

இந்தியாவில் கேஸ் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதால், உள்நாட்டு LPG உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மூன்றே நாள்களில் 10%-ல் இருந்து 25% ஆக LPG உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் தயாரிப்பதில் முழுவீச்சில் ஈடுபடவும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளது. SHARE IT

error: Content is protected !!