News September 30, 2025

இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, TNPSC அண்மையில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம். SHARE IT.

Similar News

News March 17, 2026

யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – தேர்தல் அதிகாரி

image

மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க, வீட்டிலிருந்தே தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தபால் வாக்கு செலுத்துவது கட்டாயமல்ல, அது வாக்காளர்களின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. யாரையும் தபால் வாக்கு செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

News March 17, 2026

தவெக வேண்டாம்.. பாஜக முடிவில் மாற்றமா?

image

அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்கும் முடிவை பாஜக தலைமை கைவிட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் 2026 தேர்தலில் தவெக தனித்தே களம் காணும் என்பதும், 4 முனைப் போட்டிதான் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News March 17, 2026

BREAKING: வருத்தம் தெரிவித்தார் CV சண்முகம்

image

விழுப்புரம் நிகழ்ச்சியில் <<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு CV சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு மகளிர் ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, வருத்தம் தெரிவித்த CV சண்முகம், நயன்தாராவின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்தோடு பேசவில்லை; வாய் தவறி பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!