News September 30, 2025
தொடர்ந்து 5 நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு

அக்.1 (புதன்) ஆயுதபூஜை, அக்.2 விஜயதசமி ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை நாள்களாகும். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றுவரும் வகையில், வெள்ளிக்கிழமை (அக்.3) அன்றும் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறைகளாக இருப்பதால், அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அரசு அலுவலர்களின் கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News March 18, 2026
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

ஈரோட்டில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News March 18, 2026
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

ஈரோட்டில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News March 18, 2026
தேமுதிகவுக்கு 7 சீட் ஒதுக்கீடு?

வரும் 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார உத்திகள் & தேமுதிகவின் தேர்தல் அறிக்கை குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாள்களில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.


