News September 30, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மல்லிப்பூ கிலோ ₹1,000-க்கு விற்பனையாவதாக மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, முல்லை ₹700, செவ்வந்தி ₹220, சம்பங்கி ₹200, செண்டு மல்லி ₹60, கனகாம்பரம் ₹1200, ரோஸ் ₹250, பட்டன் ரோஸ் ₹280-க்கு விற்பனையாகிறதாம். பூக்களுடன் பழங்கள், காய்கறிகள் விலையும் இந்த பண்டிகைக் காலத்தில் தமிழகம் முழுவதும் உயர்ந்துள்ளது.
Similar News
News March 7, 2026
FLASH: விஜய் மனைவி சங்கீதா வேதனை!

செங்கல்பட்டு கோர்ட்டில் <<19319427>>சங்கீதா தாக்கல்<<>> செய்துள்ள புதிய மனுவில் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 26 வருடங்கள் விஜய் உடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளதாகவும், நல்ல குடும்ப தலைவியாக இருந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
News March 7, 2026
யாரை பற்றி பதிவிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி?

ஒரு செலிபிரிட்டி எப்போது பிரச்னையில் சிக்குகிறார் என்பதை பற்றி கிருத்திகா உதயநிதி பதிவிட்டுள்ளார். மக்கள் தன்னை எப்படி பார்க்கிறார்களோ அதுதான் நான் என நினைக்க தொடங்கி, எப்போது ஒரு செலிபிரிட்டி தன்னுடைய சுயத்தை கைவிடுகிறாரோ அப்போது அவர் பிரச்னையில் சிக்குகிறார் என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார். இதனால் யாரை பற்றி கிருத்திகா சொல்லவருகிறார் என X தளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
News March 7, 2026
ஒரு பக்கம் போர், மறுபக்கம் பூகம்பம்… துயரத்தில் ஈரான்

இஸ்ரேல் தாக்குதலால் கடும் பாதிப்பில் இருக்கும் ஈரானில், இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஈரானில் பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள நிலநடுக்கம், 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக USGS அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செவ்வாயன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த நிலநடுக்கம் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


