News September 30, 2025

திண்டுக்கல் பள்ளிகள் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவர்களும் மரம் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று(செப்.30) பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாணவர்களுடைய பெற்றோர்களுக்கும் தங்கள் வீட்டின் அருகிலேயே பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரம் நடும் போட்டோ அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News March 12, 2026

திண்டுக்கல்: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

BREAKING: பழனி நவீன மயானம் முடங்கும் அபாயம்

image

பழனி ராமநாதநகர் நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில், சர்வதேச போர்ச் சூழலால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படும் நிலையில், போதிய எரிவாயு இன்றி மயானம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் அவதியைப் போக்க, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டுமெனப் கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!