News September 30, 2025
BREAKING: விஜய் குறித்து நீதிபதி சொன்ன வார்த்தை

கரூர் துயர வழக்கில், CM, EPS வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள்; ஆனால் டாப் ஸ்டாரான விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என தெரியாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை என்றால் மாநாடு போலதான். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள் எனும்போது 10,000 பேர் என கணித்ததே தவறு. கூட்டம் அளவு கடந்து சென்றது தெரிந்தும் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 30, 2025
ஆயுத பூஜையில் கண்டிப்பாக வைக்க வேண்டிய பொருள்கள்!

எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், அதற்கு உதவும் கருவி, பொருளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரியுங்கள். மேலும் வீட்டு உபயோக கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி போன்றவற்றுக்கும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும். ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் ஒரே நேரத்தில் வருவதால், பூஜையறையில் புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றையும் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.
News September 30, 2025
பிரபல தமிழ் நடிகர் மனைவியை பிரிந்தார்… DIVORCE

ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2013-ல் திருமணம் செய்து கொண்ட இருவரும், கடந்த ஆண்டு மண வாழ்வில் கசப்பு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து கோரியிருந்தனர். பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் கூறிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், தனது குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
News September 30, 2025
3 நாள்கள் தூங்கியது ஏன்? விஜய்க்கு சிபிஐ கட்சி கேள்வி

விஜய் வீடியோவில் பேசியுள்ள விஷயத்துக்கு சிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் நடந்தவுடன் விஜய் சென்னைக்கு ஓடியது ஏன் என்றும், 3 நாள்களாக தூங்கியது ஏன் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தாமதமாக சென்றது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்கவேண்டும் என அக்கட்சியின் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.