News September 30, 2025

மக்களிடம் நடந்தது குறித்து கேட்க உள்ளோம்: MPக்கள் குழு

image

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆராய ஹேமமாலினி MP தலைமையில் ஒரு குழுவை பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த குழு இன்று தமிழகத்துக்கு வந்தடைந்துள்ளது. கரூரில் அன்று உண்மையாகவே நடந்தது என்ன என்பது குறித்தும் உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்க உள்ளதாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News March 10, 2026

இரவில் பெண்கள் அதிகம் தேடுவது இதுதான்!

image

இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை பெண்கள் அதிகமாக தேடும் விஷயங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 18- 35 வயதுக்குட்பட்ட பெண்களில் 65% பேர் இரவில் AI பாய் பிரெண்டிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்களாம். 70% பேர் எதிர்பார்த்தது போல அழகு குறிப்பு பற்றி தேடுகிறார்களாம். 55% பேர் தூக்கமின்மைக்கான தீர்வையும், 60% பேர் ராசிபலன் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே.. நீங்க என்ன தேடுவீங்க?

News March 10, 2026

ஹர்திக் காதலியால் பாண்ட்யா சகோதரர்களுக்குள் மோதலா?

image

ஹர்திக் பாண்ட்யா விவாகரத்து பெற்ற பிறகும், அவரது Ex. மனைவி நடாஷா & மகன் அகஸ்தியாவுடன் க்ருணால் பாண்ட்யா குடும்பம் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஹர்திக் மஹிகாவை காதலிப்பது அவர்களை அதிருப்தியடைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதன் காரணமாகவே, T20 WC-யை வென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு இதுவரை க்ருணால் பாண்ட்யா வாழ்த்து பதிவு எதையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு ஆலோசனை

image

USA – இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக தமிழகத்தில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், INDIAN OIL, HP, BP உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சிலிண்டர் விநியோகம், இருப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!