News September 30, 2025

BREAKING: கரூருக்கு செல்லாதது ஏன்? விளக்கம்

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்கு செல்லவில்லை. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் கரூருக்கு செல்ல முடியவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், கரூர் நிகழ்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், திமுக மீது தவெகவினர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் சாடினார்.

Similar News

News September 30, 2025

விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மல்லிப்பூ கிலோ ₹1,000-க்கு விற்பனையாவதாக மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, முல்லை ₹700, செவ்வந்தி ₹220, சம்பங்கி ₹200, செண்டு மல்லி ₹60, கனகாம்பரம் ₹1200, ரோஸ் ₹250, பட்டன் ரோஸ் ₹280-க்கு விற்பனையாகிறதாம். பூக்களுடன் பழங்கள், காய்கறிகள் விலையும் இந்த பண்டிகைக் காலத்தில் தமிழகம் முழுவதும் உயர்ந்துள்ளது.

News September 30, 2025

கரூரில் இருந்து புறப்பட்டது ஏன்? விஜய் பதில்

image

கரூரை விட்டு புறப்பட்டதற்கான காரணத்தை விஜய் விளக்கியுள்ளார். நானும் மனுஷன் தான். அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த போது, எப்படி என்னால் ஊரை விட்டு கிளம்பி வர முடியும் என்று இருந்தேன். ஆனால், நான் சம்பவ இடத்திற்கு மீண்டும் சென்றிருந்தால் அதை காரணம் காட்டி, வேறொரு பதட்டமான சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே அதை தவிர்த்துவிட்டதாக விஜய் கூறியுள்ளார்.

News September 30, 2025

உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது: ஹேமமாலினி MP

image

பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை என கரூரில் ஆய்வு செய்த MP ஹேமமாலினி சாடியுள்ளார். பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது எனவும் கூறியுள்ளார். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்துபோல் இல்லை என தெரிவித்த அவர், உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!