News September 30, 2025
கரூர்: பஸ்ஸில் மயங்கி விழுந்து பரிதாப பலி!

கரூர்: குளித்தலையில் ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்த போஸ்ட்மேன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பயணிகள் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவர்கள், ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 8, 2026
கரூரில் இருந்து விலகுகிறார் செந்தில் பாலாஜி?

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
News March 8, 2026
கரூரில் மனைவி, மகள் கழுத்தறுத்துக் கொலை! JUDGMENT

கரூரில் கடந்த 2024-ம் ஆண்டு, குடும்பத் தகராறில் மனைவி கல்பனா மற்றும் 5 வயது மகள் சாரதிபாலாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி செல்வகணேஷிற்கு(46), கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. ஆத்திரத்தில் கொடூரச் செயலைச் செய்த செல்வகணேஷை, நீதிபதி தங்கவேல் குற்றவாளி என உறுதி செய்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
News March 8, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.7) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


