News September 30, 2025
புதுவை: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சமீப நாட்களில் கேரளா லாட்டரி என்ற பெயரில் வாட்ஸ்-அப், முகநூல் மூலம் புதிய மோசடி நடக்கிறது. அதாவது சமூக வலைதளத்தில் கேரள லாட்டரியை விற்பனை செய்து, அதற்கு ரூ.8 லட்சம், ரூ.16 லட்சம் பரிசு விழுந்தாகவும், அதற்கு வரி செலுத்த முன்பணம் அனுப்பி வைக்குமாறும், வங்கி கணக்கு குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு மோசடி நடக்கிறது. எனவே பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 7, 2026
புதுவை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுவை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
புதுவை: கூடுதல் தொகுதிகள் கோரும் திமுக!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 06) எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதையும், கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் தொகுதிகளை கூட்டணியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
News March 7, 2026
புதுச்சேரி: மென்பொருள் பொறியாளர் தற்கொலை

கோட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் இருந்த மாத்திரைகளை மிக்ஸியில் அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


