News April 14, 2024
சங்கல்ப் பத்திரம் இல்லை, சங்கட பத்திரம்

சங்கல்ப் பத்திரம் என்பதற்குப் பதில், சங்கட பத்திரம் என்று தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டிருக்க வேண்டுமென காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதோடு, மக்களிடையே பீதி நிலவுகிறது என்றும், இந்த சூழலை ஏற்படுத்தியற்காக மன்னிப்பு பத்திரம், (அ) சங்கடப் பத்திரம் என்ற பெயரில் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என அக்கட்சி கூறியுள்ளது.
Similar News
News September 9, 2025
₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடுகள் அல்லது சேமிப்புகளுக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.
News September 9, 2025
15-வது துணை ஜனாதிபதி, 17-வது தேர்தல்: ஏன் தெரியுமா?

நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான 17-வது தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், 2 பேர் தலா 10 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: 1952 – 1962, முகமது ஹமீது அன்சாரி: 2007 – 2017 என பதவி வகித்துள்ளனர். எனவேதான், இது 17-வது தேர்தலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போதைய தேர்தலில் CP ராதாகிருஷ்ணன், பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
News September 9, 2025
பற்றி ஏரியும் நேபாளத்தின் பதறவைக்கும் போட்டோஸ்!

இமயமலை அடிவார நாடான நேபாளம் தற்போது பற்றி எரிந்து வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் வெகுண்டெழுந்து விட்டனர். இந்த தன்னெழுச்சி போராட்டத்தில் பிரதமர், மந்திரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பற்றி ஏரியும் நாட்டின் பதைபதைக்கும் போட்டோஸை Swipe செய்து பார்க்கவும்.