News September 30, 2025
வியாசர்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

வியாசர்பாடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டருகே உள்ள மளிகை கடையில் ஜூஸ் வாங்க சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் இளங்கோ என்பவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி, தன் தாய்மாமா முருகனிடம் தெரிவித்துள்ளார். அவர், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று இளங்கோவை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
Similar News
News March 8, 2026
சென்னையில் குலைநடுங்க வைக்கும் சம்பவம்

சென்னை அண்ணா நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் 60 வயது முதியவர் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், அவரது கணவன் சந்தானம் (60) என்பவரை அவரது மனைவி கொலை செய்து விட்டு, கோணி பையில் மூட்டை கட்டி வீசி சென்றது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 7, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
சென்னை: அஷ்டலட்சுமி கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையோரம் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியையும் பிரார்த்திக்கலாம். ஷேர் பண்ணுங்க.


