News April 14, 2024
27 ஆம் ஆண்டு பால் குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரத்தில் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 27 ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா பால்குடதிருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடங்கள், காவடி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
Similar News
News April 15, 2025
பச்சிளம் குழந்தை பரிதாப பலி

செம்பனார்கோவில் அருகே மேட்டிருப்பு மைதானத்தில் விஜய் என்பவர் குடிசையமைத்து மனைவி, மகன் ராகவன்(1½) உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மக்களுக்கு இலவச உணவு வழங்க வந்த சரக்கு வாகனம் குழந்தை ராகவன் மீது மோதியது. படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேன் டிரைவர் ரஜினியை(40) போலீசார் கைது செய்தனர்.
News April 14, 2025
மயிலாடுதுறை : ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 14, 2025
தமிழ் புத்தாண்டுக்கு இது கட்டாயம் செய்ய வேண்டும்

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்