News September 30, 2025
ராணிப்பேட்டை: 10ஆம் வகுப்பு மாணவன் பலி

காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் இம்ரான் (16) இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செப் 29ம் தேதி பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் அங்குள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். இதில் இம்ரான் கிணற்று நீரில் மூழ்கி இறந்தார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இம்ரான் உடலை மீட்டனர். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 30, 2025
ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடைகள் மூடல்

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகளும் மூடி வைக்க வேண்டும், மேலும் பார்கள் அனைத்தும் மூட வேண்டும் இல்லாவிட்டால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று செப்டம்பர் 30 ம் தேதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
ராணிப்பேட்டை: குடும்ப பிரச்சனை தீர இதோ வழி

ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் உள்ளது. இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 30, 2025
ராணிப்பேட்டை: தனியார் பள்ளிகளில் அதிக வசூலா??

ராணிப்பேட்டை மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ராணிப்பேட்டை தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <