News September 29, 2025
உங்கள் CIBIL ஸ்கோரை அதிகரிக்க டிப்ஸ்!

*கிரெடிட் கார்டில், உங்கள் கடன் வரம்பை மீறி பயன்படுத்தாதீர்கள் *கடன் கட்டுவதை எப்போதும் நிறுத்திவிடாதீர்கள். Default ஆனால் கடன் பெறவே முடியாது *ஒரே நேரத்தில் பல இஎம்ஐ கடன்களை வாங்காதீர்கள் *இஎம்ஐ தவணையை உரிய காலத்துக்குள் கட்டி விடுங்கள் *அடிக்கடி உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை கவனியுங்கள் *secure loan(கார், ஹோம்) மற்றும் insecure loans(பர்சனல் லோன், கிரெடிட் கார்டு) சரியான கலவையில் இருப்பது நல்லது.
Similar News
News September 30, 2025
சஹாலை 2-வது மாதத்திலே கண்டுபிடித்தேன்: EX மனைவி

சஹால் ஏமாற்றியதை திருமணம் ஆன 2-வது மாதத்திலேயே கண்டுபிடித்ததாக அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ தெரிவித்துள்ளார். ஜீவனாம்சமாக ₹60 கோடி கேட்டதாக வெளியான தகவல் தவறானது எனவும், செய்திகளில் வெளியான பொய்யான தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இருவரும் மனமுவந்து கேட்டதால் தான் விவாகரத்து விரைவில் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
கரூர் துயரத்தில் 4 பக்கமும் தவறு: ப.சிதம்பரம்

கரூர் துயர சம்பவத்தில் 4 பக்கமும் தவறு இருப்பதாக தோன்றுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தோன்றிய ஒரு யோசனையை தலைமை செயலாளரிடம் கூறியதாகவும், இதுபோன்று பலர் தெரிவித்த யோசனைகளை பரிசீலித்து எடுக்கப்படும் முடிவுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 474 ▶குறள்: அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். ▶பொருள்: பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.