News September 29, 2025
இந்தியாவில் டிரெண்டாகும் ‘ஸ்லீப் டூர்’

இந்தியாவில் ‘ஸ்லீப் டூர்’ அதிகரித்து வருகிறது. இன்றைய சுற்றுலா பயணிகள், டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை சுற்றிப் பார்ப்பதை விட, ஓய்வு எடுக்கவே அதிகம் விரும்புகின்றனர். ஏற்கெனவே, வாழ்க்கை ஓட்டத்தில் இருக்கும் மக்கள், சுற்றுலா என்ற பெயரில் மீண்டும் அலைந்து திரிந்து சோர்வு அடைய விரும்புவதில்லை. அவர்கள் தேடுவதெல்லாம் ஒரு அமைதியான இடம். நீங்க எந்த மாதிரி சுற்றுலா பயணி? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 30, 2025
தவெக மா.செ. கைதில் மர்மம்: மனைவி பேட்டி

கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை கைது செய்ததற்கான எந்த வீடியோ ஆதாரமும் இல்லாத நிலையில், அவர் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் போலீஸே பொறுப்பு என்று அவரது மனைவி ராணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும், அஜித்குமார் லாக்கப் மரணம் போல் ஆகிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
கரூரில் டாக்டர் அனுமதியின்றி 7 பேர் டிஸ்சார்ஜ்

கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சையிலிருந்த 7 பேர் டாக்டர் அனுமதியின்றி ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக கரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 110 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், 2 பேர் உயர் சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.