News September 29, 2025

கரூரில் 41 பேர் உயிரிழந்தது எப்படி? Postmortem Report

image

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், 25 பேர் 2 – 3 நிமிடங்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கியதில் மிதிபட்டு விலா எலும்புகள் முறிந்து பலியானது மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வோர் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருங்கள். SHARE IT.

Similar News

News September 30, 2025

கரூரில் டாக்டர் அனுமதியின்றி 7 பேர் டிஸ்சார்ஜ்

image

கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சையிலிருந்த 7 பேர் டாக்டர் அனுமதியின்றி ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக கரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 110 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், 2 பேர் உயர் சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News September 30, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 30, 2025

BREAKING: விஜய் வீடு திரும்பினார்

image

கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அன்று இரவே சென்னை திரும்பினார் விஜய். கிட்டத்தட்ட 36 மணி நேரத்துக்கு பிறகு, இன்று காலை 11 மணியளவில் நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் சென்றார். அங்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அங்கிருந்து நீலாங்கரை வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

error: Content is protected !!