News April 14, 2024
நாளை இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.1000 வந்து சேர்ந்துவிடும். சரியான பயனாளிகளுக்கு ரூ.1000 செல்கிறதா என்பதை அறிய, தற்போது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தப்படுகிறது . அதே நேரம் தேர்தல் காரணமாக மேல்முறையீடு செய்த மகளிருக்கு இம்மாதம் ரூ.1000 வழங்கப்படாது. அவர்களுக்கு அடுத்த மாதம் வழங்கப்படும்.
Similar News
News July 11, 2025
₹189-க்கு புதிய பிளானை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.
News July 11, 2025
கோலிவுட்டில் ஜாதி இல்லையா? கலையரசன் பரபரப்பு Statement!

தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என கலையரசன் கூறியுள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி பாடம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News July 11, 2025
மாலை 5 மணிக்கு.. சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் சபரிமலையின் மாளிகப்புரத்தம்மன் கோயிலில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் பிரதிஷ்டைக்காக, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்.