News September 29, 2025

குரூப் 2 தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி

image

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை சுமார் 1.34 லட்சம் பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுத 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 4.18 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதன்படி 645 குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களில், ஒரு இடத்துக்கு மட்டும் 650 பேர் போட்டி போடுகின்றனர். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு எளிதாக இருந்ததா?

Similar News

News September 29, 2025

புதன்கிழமை பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

image

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.

News September 29, 2025

Cinema Roundup: சிம்பு படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுப்பு

image

*’யாத்திசை’ இயக்குநர் தரணி ராஜேந்திரனின் புதிய படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். *தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என மஹிமா நம்பியார் எச்சரிக்கை. *சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டதாக தகவல். *’GOAT’ நாயகி மீனாட்சி செளத்ரி இந்தி திரையுலகில் அறிமுகமாவதாக தகவல்.

News September 29, 2025

வங்கி அக்கவுண்ட் இருக்கா.. இத உடனே பண்ணுங்க!

image

PM ஜன்தன் வங்கி கணக்குகள் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், நாளைக்குள் Re-Kyc அதாவது தகவலை புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடையூறின்றி வங்கியின் சேவைகள், அரசின் மானியங்களை பெறவும் இந்த KYC மறுபுதுப்பித்தலை செய்யும்படி RBI கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது 55.90 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. SHARE IT.

error: Content is protected !!