News April 14, 2024
மயிலாடுதுறையில் 406 பேர் கைது

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் தற்போது வரை 400 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 406 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 8437 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 3534 பாண்டி மது பாட்டில்கள் 1084 தமிழ்நாடு மது பாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
மயிலாடுதுறை: ரூ. 45,000 சம்பளத்தில் வங்கி வேலை!

மயிலாடுதுறை : Engineering படித்தவர்களுக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) தமிழ்நாட்டில் Supervisors உள்ளிட்ட 63 பணியிடங்கள் நிரப்படவவுள்ளது. மாத சம்பளமாக Rs.45,000 வழங்கப்படும். கல்வி தகுதி B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். இங்கே <
News August 15, 2025
20 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கல்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ₹1,33,800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
News August 15, 2025
தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.