News April 14, 2024
திருவள்ளூர்: ரயில் மோதி சிறுமி பலி

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த அன்பழகனின் மகள் மகாலட்சுமி. விடுமுறைக்கு புட்லூரில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு பழனி செல்வதற்காக ரயில் ஏற வந்த போது, தண்டவாளத்தைக் கடக்கையில் ரயில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 17, 2025
திருவள்ளூர்: போலீசிடமே பெண்களுக்கு விலை பேசிய புரோக்கர்கள்

ஆவடி அடுத்த செவ்வாப்பேட்டை, காந்திநகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணைக்கு மஃப்டியில் சென்ற போலீசாரிடமே பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் விலை பேசிய முருகன்(25), பாஸ்கர்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று(டிச.16) தீர்ப்பளிக்கப்பட்டது.
News December 17, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News December 17, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


