News September 29, 2025
BREAKING: அவசரமாக கிளம்பினார் விஜய்

விஜய் தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த அன்று இரவு தனது வீட்டிற்குள் சென்ற விஜய், சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் கரூர் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 29, 2025
கரூர் துயரத்தில் நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

கரூர் துயரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் நிகழ்ச்சிகளின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்படும் எனக் கூறிய அவர், அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகளை ஒதுக்கி வைத்து, மக்களுடைய நலனுக்காக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.
News September 29, 2025
தொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கொடுக்கும் அரசு திட்டம்

பெண் தொழில்முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது ஸ்த்ரி சக்தி யோஜனா திட்டம். இதில் ₹5 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். பெண்கள் மட்டுமே நடத்தும் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பெண்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கடன் பெற விரும்பும் பெண்கள் SBI வங்கியை அணுகவும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 29, 2025
இந்த மெசேஜ் வருதா.. ஜாக்கிரதையா இருங்க!

டெக்னாலஜி வளர, வளர மோசடிகளும் அதிகரிக்கின்றன. ‘Delhivery’ ஏஜென்சி பெயரில் அதிரவைக்கும் மோசடி ஒன்று நடந்து வருவதாக எச்சரிக்கப்படுகிறது. பார்சல் டெலிவரி செய்ய முயற்சித்து அது மிஸ்ஸானதாகவும், 2-வது முறை டெலிவரி செய்ய இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க என மெசேஜ் வரும். அதில், அட்ரஸ் செக் செய்த பிறகு, ‘Retry delivery fee’ என ₹25 கேட்கின்றனர். பலரும் கட்டிய பிறகே, இது மோசடி என தெரியவந்துள்ளது. உஷாரா இருங்க!