News September 29, 2025
BREAKING:மௌனம் கலைத்தார் ஆதவ் அர்ஜுனா

மரணத்தின் வலியையும், கரூர் மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மரணத்தின் வலியை 5 வயது சிறுவனாக தனது தாயின் தற்கொலையை பார்த்தபோதே உணர்ந்ததாக தெரிவித்த அவர், அந்த வலியை தற்போது மீண்டும் இந்த மரணங்கள் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையை சுமக்கும் உறவாக தனது பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.
Similar News
News December 9, 2025
காதல் வலைவிரிக்கும் கயாது லோஹர் கிளிக்ஸ்

இதழோர ஈரம் குளிர்வித்தாலும், இலைமறை காயாய் படும் அவளது பார்வையோ இனம்புரியாத இதமான வெப்பத்தை அளிக்கிறது. காதோரம் சிறியதாய் மின்னும் வளைய காதணி வண்ணத்துப்பூச்சியாய் சுற்ற, சிரிப்பில் உதிர்ந்த முத்துக்களை சங்கு கழுத்து சரியாக பற்றுகிறது. மேனி ஒளிர, கண்கள் காதல் சொல்ல சற்றே கவர்ச்சியுடன் நிற்கிறார் கயாது லோஹர். இந்த கவிக்கு சொந்தக்காரியின் போட்டோஸை மேலே swipe செய்து பாருங்கள். பிடிச்சா லைக் போடுங்க.
News December 9, 2025
இந்த கீரையில் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக கீரை என்றாலே ஆரோக்கியமான உணவு தான். மண்ணின் பொக்கிஷம் எனப்படும் பருப்பு கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *ஒமேகா-3 அதிகம் உள்ளதால்
இதயத்திற்கு நல்லது *கெட்ட கொழுப்பை குறைப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது *இதயத்தை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது *மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது *கண், சருமத்திற்கு நல்லது *மலச்சிக்கல் குணமாகும் *குடல் நோய்களை தடுக்கிறது.
News December 9, 2025
கரூர் துயரத்தில் இருந்து பாடம் கற்ற விஜய்

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, முதல்முறையாக விஜய்யின் மக்கள் சந்திப்பு புதுவையில் நடந்து வருகிறது. திருச்சி, அரியலூர், நாகை, நாமக்கலில் நடந்த மக்கள் சந்திப்பின்போது, ரோடு ஷோ நடத்தினார். ஆனால், புதுவையில் அதுபோன்ற நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. சென்னையில் இருந்து புதுச்சேரி உப்பளம் வரை ஆரவாரமும் இன்றி காரிலேயே பயணித்த விஜய், பிரசார வாகனத்தில் பேரணியாக செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டார்.


