News September 29, 2025

கரூர் துயரத்தில் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

image

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அண்ணாமலை, EPS, கிருஷ்ணசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்புகின்றனர். பரப்புரையின்போது மின்சாரம் துண்டிப்பு, போலீஸ் தடியடி, குறுகிய இடத்தில் அனுமதி, ஆம்புலன்ஸ் நுழைந்தது என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, குறுகிய இடத்தில் விஜய்க்கு அனுமதி அளிப்பது தவறு என, சில நாள்களுக்கு முன்பே சிலர் எச்சரித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Similar News

News September 29, 2025

டிவிக்கு ஜெயில்.. பாக்., டீமை கிண்டலடித்த பாக்., Ex. வீரர்!

image

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மண்ணை கவ்வுவதை ஜீரணிக்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். நேற்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா வெளியிட்ட பதிவு, வைரலாகி வருகிறது. நேற்று தோல்வியடைந்ததால், டிவியை கோபத்தில் உடைத்துவிடக்கூடாது என்பதற்காக, அதனை இரும்பு கம்பிகளுக்குள் பூட்டிவைத்திருக்கும் போட்டோவை பகிர்ந்து அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

News September 29, 2025

SIM CARD-களுக்கு Expiry Date இருக்கா?

image

SIM CARD-களுக்கு Expiry Date இல்லையென்றாலும், 90 நாட்களுக்கு மேல் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலிழந்து போகலாம். அதோடு, தண்ணீரில் விழுந்தாலோ, அடிக்கடி கழற்றி மாட்டும்போதோ SIM CARD சேதமடையலாம். இதனால் நெட்வொர்க் இணைப்பு பிரச்னைகள் ஏற்படும். எனவே, இத்தகைய பிரச்னைகளை சந்தித்தால் மட்டும், பயனர்கள் அவர்களது தொலைபேசி சேவை வழங்குனரை அணுகி, SIM CARD-ஐ மாற்றலாம். SHARE.

News September 29, 2025

BREAKING: கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜி காரணம்: TVK

image

கூட்ட நெரிசல் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. மதுரை HC-ல் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள மனுவில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி குறித்து விஜய் பேசிக்கொண்டிருந்த போது, செருப்பு, கற்கள் வீசப்பட்டன என்றும் அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!