News September 29, 2025

TNPSC குரூப் 4 ரிசல்ட் அப்டேட்

image

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 4-வது வாரத்தில் வெளியாகும் என TNPSC தலைவர் S.K.பிரபாகர் அறிவித்துள்ளார். அத்துடன், நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தேர்வை 4,18,791 பேர் எழுதியுள்ளனர். 1,34,843 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

Similar News

News September 29, 2025

ராம்நாடு: கட்டடத் தொழிலாளி அடித்து கொலை

image

ராம்நாடு, பசும்பொன் நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் (38) கட்டட வேலை செய்து வருகிறார். அவரது நண்பரான பரமக்குடி மஞ்சள் பட்டணத்தை சேர்ந்த தினேஷ் பாண்டியன் என்பவரின் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ஐந்துக்கும் மேற்பட்டோர் முத்துராமலிங்கத்தை வீட்டில் அடித்து கொலை செய்துள்ளனர். கொலை குறித்து எமனேஸ்வரம் போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 29, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

image

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹60 உயர்ந்து ₹10,700-க்கும், 1 சவரனுக்கு ₹480 உயர்ந்து ₹85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹3280 அதிகரித்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News September 29, 2025

மூலிகை: மாசிக்காயின் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ✱தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வர குணமடையும் ✱மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும் ✱டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட குணமாகும். SHARE.

error: Content is protected !!