News September 29, 2025

குறைகளை களையவே ஆணையம்: அருணா ஜெகதீசன்

image

தமிழகத்தையே உலுக்கிய கரூர் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் கரூருக்கு சென்று விசாரணையை துவக்கினார். இதுகுறித்து அவர் பேசுகையில், குறைபாடுகளை களைவதற்காகவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பரிந்துரைப்போம் என்றார்.

Similar News

News September 29, 2025

செப்டம்பர் 29: வரலாற்றில் இன்று

image

*உலக இதய நாள்.
*1832: இலங்கையில் கட்டாய வேலை ஒழிக்கப்பட்டது.
*1957: அரசியல்வாதி H.ராஜா பிறந்தநாள்.
*1970: நடிகை குஷ்பு பிறந்தநாள்.
*2011: வாச்சாத்தி வன்முறையில், தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News September 29, 2025

சிந்தூருக்கு கிடைத்த திலக் (வர்மா) Emotional

image

ஆசிய கோப்பை ஃபைனலில் பவுலிங்கில் பாக்.,ஐ கட்டுப்படுத்திய இந்தியா, சேஸிங்கின் தொடக்கத்தில் தடுமாறியது. அப்போது களத்தில் இறங்கிய திலக் வர்மா, தனது நிதான ஆட்டத்தால் 69 ரன்களை குவித்து, அவுட்டாகாமல் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது போல், விளையாட்டில் பாக்.,க்கு ‘திலக்’ வர்மா விளாசியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

News September 29, 2025

இந்தியாவின் வெற்றி என்பது விதி: அமித்ஷா

image

எந்த களமாக இருந்தாலும் இந்தியா வெற்றி பெறும் என்பது விதி என்று ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை அமித்ஷா பாராட்டியுள்ளார். அதேபோல், இந்தியாவின் புதிய வழங்குநர்கள் என ஜெய்சங்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையை 9-வது முறையாக இந்தியா கைப்பற்றிய நிலையில், <<17861425>>முர்மு<<>>, <<17861414>>மோடி<<>> உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!