News September 29, 2025

அக்கறையுடன் விசாரித்த ராகுல் காந்தி: CM ஸ்டாலின்

image

கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் ராகுல் காந்தி விசாரித்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விசாரித்ததாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை அளித்ததாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் ஆழ்ந்த இரங்கலையும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

Similar News

News December 8, 2025

PAK-ஐ கூடுதலாக அடித்திருக்க முடியும்: ராஜ்நாத் சிங்

image

ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு இன்னும் கூடுதலான இழப்புகளை நம்மால் ஏற்படுத்தி இருக்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நமது படைகள் பொறுமையுடன் செயல்பட்டு, தேவையான இழப்புகளை மட்டும் ஏற்படுத்தின. இந்த வெற்றிக்கு ராணுவம், நிர்வாகம், எல்லைப்புற மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். இந்த பன்மைத்துவம் தான் உலகில் நம்மை தனித்துவமாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

₹500 கோடி கொடுத்தால் CM தான் ஆக முடியுமா?

image

₹500 கோடி கொடுத்தால் பஞ்சாப் CM ஆக முடியும் என அம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். ஆனால், பணம் கொடுப்பவர்கள் தான் CM வேட்பாளராக அறிவிக்கப்படுவர். தனது கணவரை CM வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், அவர் அரசியலில் கவனம் செலுத்தமாட்டார் என்றும் கவுர் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 8, கார்த்திகை 22 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 1.45 PM – 2.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9.15 AM – 10:15 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

error: Content is protected !!