News September 28, 2025
BREAKING: கரூர் சம்பவம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு

கரூர் துயர சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் அறிவுறுத்தலின்பேரில், ஏற்கெனவே அரசுக்கு எதிராக ஐகோர்ட்டை நாடியுள்ள தவெக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது. மேலும், பிரசார கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதாகவும், கற்கள் எறியப்பட்டதாகவும் CTR நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 473 ▶குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ▶பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
News September 29, 2025
ஆசிய கோப்பை டிராபியை வாங்க இந்தியா மறுப்பு

9-வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கோப்பை மற்றும் பதக்கங்களை பாக்., முன்னாள் அமைச்சரும், ACC தலைவருமான மொஷின் நாக்வியிடம் இருந்து பெற இந்தியா மறுத்துள்ளது. அதற்கு பதிலாக, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கோப்பையை பெற இந்தியா விரும்புகிறதாம். இருப்பினும், ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட்டுவிட்டன.
News September 29, 2025
மரணத்துக்கு முன்… திடுக்கிடும் உண்மை

மரணம் சம்பவிக்கும் முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு விடைக் கொடுத்துள்ளது லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வு. மரணத்துக்கு முன், நம் மூளை அதிவேகமாக வாழ்க்கையின் முக்கிய நினைவுகளை மீட்டெடுத்து, மனக்கண் முன் நிறுத்துவதை கண்டறிந்துள்ளனர். இது, மரணத்துக்கு அப்பால் என்ன என்பதை பற்றி புதிய தேடலுக்கு வழிவகுத்துள்ளது. எனில், மூளைச்சாவுடன் வாழ்வு முடிந்துவிடாதா?