News September 28, 2025
விஜய் பிரசாரத்தில் மின்தடை இல்லை: மின்சார வாரியம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். சிலர் மின்சார வயர்களுக்கு அருகில் உள்ள மரங்களின் மீது ஏறியிருந்ததால் சில நிமிடங்கள் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, அவர்களை அப்புறப்படுத்திய பிறகு உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். முன்னதாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
Similar News
News September 28, 2025
இனி மாதந்தோறும் ₹1,500.. புதிய அப்டேட்

பணியாளர் வைப்பு நிதி(EPFO) அமைப்பு, விரைவில் அதன் புதிய தளமான EPFO 3.0-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. PF கணக்கு வைத்திருப்போர் ATM-ல் பணம் எடுக்கும் வசதி, PF கணக்கை UPI-யுடன் இணைப்பது, எளிதான கிளெய்ம் உள்பட பல புதிய அம்சங்கள் இதில் இருக்கும். மேலும், அக்.10-11 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில், PF பென்ஷன்தாரர்களின் குறைந்தபட்சம் பென்ஷன், ₹1500–₹2000 ஆக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News September 28, 2025
BREAKING: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கரூரில் நேற்று அவரது பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கட்சி தொண்டர்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். இதனால், அவரது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 28, 2025
IND பவுலர்களை சோதிக்கும் பாக்., பேட்ஸ்மென்

பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான், 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது. ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் போட்டி தொடங்கியதும், முதல் ஓவரை சிறப்பாக வீசிய ஷிவம் துபே, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால், பாக்., பேட்டிங்கை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்., அணி கவனமாக விளையாடி வருகிறது. முதல் விக்கெட்டை யார் வீழ்த்துவார்?