News September 28, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை இயங்காது

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை(செப்.29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கர் பேரவை அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல், பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். SHARE IT.
Similar News
News September 28, 2025
Asia Cup Finals : இந்தியா பவுலிங்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி முதலில் பவுலிங் செய்யவுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வீழ்த்தியுள்ளது. விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ள இந்தியா, இறுதிப்போட்டியிலும் ஆதிக்கத்தை தொடர அதிக வாய்ப்புண்டு. அதே நேரத்தில், பாகிஸ்தானும் கடுமையான போட்டியை வெளிப்படுத்தும். யார் ஜெயிப்பாங்க?
News September 28, 2025
இளம் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

ராஜஸ்தான், கோட்டாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர் ஷர்மா(10) மற்றும் அவரது அண்ணன் சவுர்யா(15) இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வீர் ஹனுமான்’ சீரியலில் நடித்த வீர் ஷர்மா, நாடு முழுவதும் மிகவும் பிரபலமடைந்தார். குறிப்பாக சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி வரும் ‘நெக்ஸ்ட்’ படத்தில் நடித்து வந்தார். வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. #RIP
News September 28, 2025
லடாக் கலாச்சாரத்தின் மீது பாஜக தாக்குதல்: ராகுல்

லடாக் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். லடாக்கின் கலாச்சாரமும், பாரம்பரியமும் RSS மற்றும் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மக்களுக்கு, 4 பேரைக் கொன்றும், சோனம் வாங்சுக்கை கைது செய்தும் மத்திய அரசு பதிலளித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.