News September 28, 2025

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை இயங்காது

image

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை(செப்.29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கர் பேரவை அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல், பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். SHARE IT.

Similar News

News December 30, 2025

RSS நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமா

image

சீமான் பேசும் அரசியலில் பெரியார் வெறுப்பு ஆழமாக உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். திமுகவை மட்டுமே சீமான் எதிர்க்கவில்லை என்ற அவர், அதன் அடிப்படை தத்துவத்தை கேள்விக்குறியாக்குகிறார் எனவும், RSS நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இதனால்தான் சீமானின் கருத்தை விமர்சிப்பதாகவும், தனிப்பட்ட வெறுப்பும், உள்நோக்கமும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

News December 30, 2025

சின்ன காய் தான்… ஆனால் நன்மைகள் பெரிது!

image

வீட்டு தோட்டங்களில் எளிதாக கிடைக்கும் ஒரு காய் சுண்டைக்காய். சிறிதாக இருந்தாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகப்பெரிது என்கின்றனர் டாக்டர்கள். வாரம் 2 முறை இதை சாப்பிட்டால், *ரத்தம் சுத்தமடையும் *வயிற்றுக் கிருமிகள் அழியும் *வயிற்றுப் புண்களை ஆற்றும் *மலச்சிக்கலை நீக்கும், அஜீரண கோளாறுகள் குணமாகும் *சுவாச நோய்களுக்கு நல்லது *சர்க்கரை நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், உடல் சோர்வு குறையும்.

News December 30, 2025

தேதி குறிச்சாச்சு.. ரஷ்மிகாவுக்கு டும் டும் டும்!

image

நடிகை ரஷ்மிகா மந்தனா- நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏதும் வெளிவராத சூழலில், தற்போது அவர்களின் திருமணத் தேதி குறித்த தகவல் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2026 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இருவரும் ராஜஸ்தானில் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

error: Content is protected !!