News September 28, 2025
அருப்புக்கோட்டை அருகே கார் விபத்து.. ஒருவர் பலி

அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி அருகே இன்று (செப். 28) அதிகாலை கார் விபத்தில் அல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த யோகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News December 8, 2025
மீண்டும் ஆட்சியர் தலைமையில் காப்பி வித் கலெக்டர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காபி வித் கலெக்டர் (Coffee With Collector) என்ற 209- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள்(தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) கீழ் மீட்கப்பட்ட 11 வளரிளம் பருவ தொழிலாளர்களுடன் ஆட்சியர் சுகபுத்ரா கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
News December 8, 2025
விருதுநகரில் டைடல் நியோ பூங்கா – ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில், மதுரை மாவட்டத்தில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் சிவகங்கை மாவட்டத்திலும் டைடல் நியோ பூங்கா நிறுவப்பட்டு வரும் நிலையில் விருதுநகர், நெல்லை மற்றும் குமரி ஆகிய தென்மாவட்டங்களிலும் டைடல் நியோ பூங்காக்கள் நிறுவ திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
News December 8, 2025
விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


