News September 28, 2025

கண்களும் மனசும் கலங்கி தவிக்கிறேன்: விஜய்

image

கரூர் துயரத்தினால் கண்களும் மனசும் கலங்கி தவிக்கிறேன் என விஜய் வேதனை தெரிவித்துள்ளார். தன் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்றும் சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தவெக அனைத்து உதவிகளையும் செய்யும் என குறிப்பிட்டுள்ள அவர், இறைவன் அருளால் இத்துயரத்தில் இருந்து மீண்டும் வர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.

Similar News

News September 28, 2025

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை இயங்காது

image

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை(செப்.29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கர் பேரவை அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல், பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். SHARE IT.

News September 28, 2025

விஜய்க்கு எதிராக பாதிக்கப்பட்டவரே வழக்கு

image

தவெக பரப்புரைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்துள்ளார். முறையான பாதுகாப்பு இல்லாமல் இனி தவெக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.

News September 28, 2025

விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்னென்ன? (1/2)

image

➤மத்திய-மாநில அரசின் எத்தகைய உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ➤அரசின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெற முடியும். ➤விசாரணைகளை நடத்தி குற்றத்தை கண்டறியும்பட்சத்தில், அது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முடியும் ➤ஆனால் குற்றவாளிகள் என ஆணையம் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு தண்டிக்க முடியாது. ➤ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் அரசு தாக்கல் செய்யும்.

error: Content is protected !!