News September 28, 2025
விரும்பியவருக்கு ஓட்டு போடுங்க.. கூட்டம் போடாதீர்கள்’

ஓட்டு போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் வாழ்வை தொலைக்க கூட்டம் போடாதீர்கள் என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது X தள பதிவில், 10 குழந்தைகள் பலியானதை சுட்டிக்காட்டி, இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
<<-se>>#karurstampede<<>>
Similar News
News September 28, 2025
கரூர் துயரத்திற்கு காங்கிரஸ் சார்பில் ₹1 கோடி நிவாரணம்

கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு TNCC தலைவர் செல்வப்பெருந்தகை, MP ஜோதிமணி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ₹1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும், துக்கம் அனுசரிக்கும் விதமாக காங்., கட்சி 3 நாள்களுக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.
News September 28, 2025
BCCI தலைவரானார் மிதுன் மன்ஹாஸ்!

மும்பையில இன்று நடந்த ஆண்டு கூட்டத்தில், BCCI தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். IPL-ல் டெல்லி, புனே, சென்னை அணிகளுக்காக மிதுன் விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபியில் டெல்லி கேப்டனாகவும் இருந்துள்ளார். கடைசியாக ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அதேபோல், இன்றைய பொதுக்கூட்டத்தில் ராஜீவ் சுக்லா, BCCI துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
News September 28, 2025
போலீஸ் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது: சசிகலா

கரூர் துயரத்திற்கு போலீஸின் மெத்தனப்போக்கே முதல் காரணம் என சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் போலீஸ் மீது நிறைய தவறுகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மாநில அரசு மட்டும் விசாரணை மேற்கொண்டால் போதாது என்றும், மத்திய அரசு தலையிட்டு உண்மையான தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.