News September 28, 2025
திருச்சி: விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் பரிசு அறிவிப்பு

தமிழகத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், கரும்பு ஆகியவை சாகுபடி செய்து மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
திருச்சி: வேட்டையாடிய 5 பேர் அதிரடி கைது

வளநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இறந்த நிலையில் 4 மயில்கள் கிடந்துள்ளன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பசாமி, திருப்–பதி, கார்த்திக், பரத்குமார், கருப்பையா ஆகி–யோர் மயில்களை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 13, 2026
திருச்சி: விசைத்தறியாளர்களுக்கு மானியம் அறிவிப்பு

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வழக்கமான தறிகளை தரம் உயர்த்துதல், நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கைத்தறி உதவி இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
திருச்சி: விசைத்தறியாளர்களுக்கு மானியம் அறிவிப்பு

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வழக்கமான தறிகளை தரம் உயர்த்துதல், நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கைத்தறி உதவி இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


