News September 28, 2025
TN அரசு, போலீஸ் கடமை தவறிவிட்டது: EPS

விஜய்யின் கரூர் பரப்புரையில் TN அரசும், போலீசும் கடமை தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். விஜய் பேசி கொண்டிருந்த போது தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது சந்தேகத்தை கிளப்புகிறது என்றும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று EPS பேசினார்.
Similar News
News January 13, 2026
சென்னையில் PM மோடி பங்கேற்கும் மாநாடு

ஜன.23-ல் தமிழகம் வரும் PM மோடி, மதுரையில் நடைபெறவுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மோடி பங்கேற்கும் மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்ளை தேர்வு செய்து, ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை பாஜகவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
News January 13, 2026
வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு ₹3,000

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ₹3,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் அனுமதியளித்த நிலையில், இன்று முதலே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். பொங்கல் முடிந்தபின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பண்டிகைக்கு முன்பே தரப்படவுள்ளது பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 13, 2026
காங்கிரஸ் தான் தமிழர்களை அவமதித்தது: பாஜக

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஜன நாயகன் குறித்த ராகுல் காந்தியின் கருத்து உள்நோக்கம் கொண்டது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் CR கேசவன் கூறியுள்ளார். மேலும் அன்றைய காங்கிரஸ் அரசு தான், ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்று இழிவாகக் கூறி, தமிழர்களின் உணர்வை அவமதித்தது என்றும், தற்போது திமுக-காங்., கூட்டணி பிளவுபட்டு வருவதை திசைதிருப்பவே ராகுல் அப்பட்டமாக பொய் சொல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


