News September 28, 2025

Just In: N.ஆனந்த், CTR நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக பொ.செ., N.ஆனந்த், CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது. குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலட்சிய செயல்களுக்கு தண்டனை, கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை ஆகிய 5 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Similar News

News September 28, 2025

கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என 3 தவணைகளில் பணம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். இந்த முக்கிய திட்டத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News September 28, 2025

காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும்: அன்புமணி

image

கரூர் பெருந்துயருக்கு காவல்துறையின் இன்டலிஜென்ஸ் பிரிவு பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரசியல் நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காமல், சரியான இடங்களை அரசு ஒதுக்க வேண்டும் என தெரிவித்த அவர், தனிநபர் கமிஷன் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்களும் அரசியல் நிகழ்வுகளில் குழந்தைகளை கூட்டிவருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News September 28, 2025

CBI விசாரணை நடத்த வேண்டும்: OPS

image

கரூர் துயர சம்பவத்தை CBI விசாரிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்து நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வரைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!