News September 28, 2025

Just In: N.ஆனந்த், CTR நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக பொ.செ., N.ஆனந்த், CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது. குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலட்சிய செயல்களுக்கு தண்டனை, கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை ஆகிய 5 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Similar News

News January 5, 2026

பிரபல நடிகர் அப்பச்சன் காலமானார்

image

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன்(77), ஆலப்புழாவில் இன்று காலமானார். 70-களில் மலையாள சினிமாவிற்கு அடியெடுத்து வைத்த அவர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘சுறா’ படத்தில் அவர் நடித்திருந்தார். அப்பச்சன் மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News January 5, 2026

முகமது ஷமிக்கு ECI சம்மன்

image

மேற்கு வங்கத்தில் SIR நடைமுறையின் ஒரு பகுதியாக, முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது கைஃப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களது கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக, வரும் 9 மற்றும் 11-ம் தேதிகளில் உதவி தேர்தல் பதிவு அதிகாரி முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி.,யில் பிறந்த ஷமி, பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் நிரந்தரமாக வசித்து வருவதுடன், அங்கு வாக்காளராகவும் உள்ளார்.

News January 5, 2026

கரும்பு கொள்முதல்.. அரசை விளாசிய அன்புமணி

image

பொங்கல் தொகுப்புக்கான கரும்பை, உழவர்களிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்யுமாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கரும்பு கொள்முதல் பற்றி இதுவரை அரசு அறிவிக்காததால், அதை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு கரும்புக்கு ₹35 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைத்தரகர்கள் தலையீட்டால் உழவர்களுக்கு ₹15 மட்டுமே கிடைக்கும் என அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!