News September 28, 2025

பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்திருந்தால்..

image

உலகம் அறியாத குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து சென்று, பறிகொடுத்து கதறி அழும் பெற்றோர்கள் ஒரு கணம் யோசித்திருந்தால், பெரும் துயரம் தவிர்க்கப்பட்டிருக்குமே. குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டும், அதை பொருட்படுத்தவில்லை. ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையையும் தூக்கி சென்றுள்ளனர். கதறி அழும் நேரத்தில் இன்று மற்றவர்கள் ஆறுதல் கூறினாலும், வலி பெற்றோர்களுடையது தானே!
<<-se>>#karurstampede<<>>

Similar News

News September 28, 2025

கரூரில் சீமானை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

image

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க கரூர் அரசு ஹாஸ்பிடலுக்கு சீமான் சென்றார். இதனையடுத்து, பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை காண முற்பட்ட சீமானை, பலியானோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். தங்களை பிணவறையினுள் செல்ல அனுமதிக்கவில்லை எனவும், உடல்களை விரைவில் ஒப்படைக்க மறுக்கிறார்கள் என்றும் சீமானிடம் கூறி முறையிட்டுள்ளனர்.

News September 28, 2025

கரூர் சம்பவத்தால் தாங்க முடியாத துயரம்: கார்த்தி

image

கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று கார்த்தி கூறியுள்ளார்.

News September 28, 2025

சற்றுமுன்: நீதிபதி இல்லத்திற்கே சென்ற தவெகவினர்

image

சென்னையில் உள்ள நீதிபதி தண்டபாணி இல்லத்துக்கு தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன், CTR நிர்மல்குமார் சென்றுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும், CCTV ஆதாரங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனவும் முறையீடு செய்துள்ளனர். இதனை நீதிபதி ஏற்கும் பட்சத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!