News September 28, 2025

கீரனூர்: மனைவி மீது மனக்கசப்பு, கணவன் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த கோட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் கணேசன் (34) இவருக்கும் அவரது மனைவி நிஷாந்தி(34). இருவருக்கும் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் அவரது மனைவி நிஷாந்தி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணேசன் மது போதையில் வீரடிவயலில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

புதுக்கோட்டை: மின் பிரச்சனையா? இதோ தீர்வு

image

புதுக்கோட்டை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!’

News January 20, 2026

புதுகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

புதுகை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

புதுக்கோட்டை: வேலை வாய்ப்பு முகாம்!

image

புதுகை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் தனியார் துறையில் பணி அமர்த்தும் நோக்கில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 18 முதல் 35 வயது உள்ளோர் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!