News September 28, 2025
தஞ்சையில் கவிஞர் வைரமுத்து சிறப்புரை

தஞ்சாவூரில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூல்களுக்கான கையொப்ப திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் வைரமுத்து எந்தவொரு ஆதரவும் இல்லாமல் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்த திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை என்றார். மேலும் திருக்குறளை நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.
Similar News
News January 13, 2026
தஞ்சை கமிஷனர் முக்கிய அறிவிப்பு

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும், போகிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகள், ஈரக்கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை, எரிக்காமல் சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து வார்டுகளிலும் இன்று மற்றும் நாளை குப்பை சேகரிப்பு மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
News January 13, 2026
தஞ்சை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவரது வீட்டில் கடந்த கடந்த 4.7.2025 அன்று கதவை உடைத்து உள்ளே புகுந்த அமர்நாத் (24), சுகுமார் (28) ஆகியோர் வீட்டில் இருந்த 41 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கு நேற்று தஞ்சை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
News January 13, 2026
தஞ்சை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய நாட்களில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் இயங்காது என்றும், இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர்!


